• Sep 20 2024

மீனாவினால் பதறும் ரோகிணி... சுருதியால் தடுமாறு ரவி... இனி நிகழப்போவது என்ன... சிறகடிக்க ஆசை இன்றைய நாள் எபிசோட்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது அந்த வகையில் இன்றைய நாளுக்கான  எபிசோட் எப்படி இருக்கு என்று பார்ப்போம்.


முத்து, கல்யாணியுடைய அம்மா மற்றும் மகனை கூட்டிக்கொண்டு மீனாவை பார்க்க வீட்டுக்கு வருகிறார். கல்யாணிக்கு தெரிந்தால் திட்டுவாளே என்று பயத்துடன் இருக்கிறார் கல்யாணியின் அம்மா. அப்போது கால்யாணி அங்கு வந்து உள்ளே போக வேணாம் என்று மறைந்திருந்து சைகை காட்டுகிறாள். அத்தோடு நேற்றைய எபிசோட் முடிந்தது. 


இன்றைய எபிசோடில் மீனா கிரிஷ் மற்றும் கல்யாணி அம்மாவை பார்த்து ஏன் சொல்லாமல் போனீங்க, நாங்க  உங்களை பார்க்கத்தான் வந்தோம். கிராமத்தில் தனியாக இருப்பதற்கு உங்க மகள் கூடவே இருக்கலாமே என்று மீனா கூறுகிறாள். மேலும் எனது நம்பர் தருகிறேன் வைத்துக்கொள்ளுங்கள் எதும் அவசரம் என்றால் கால் பண்ணுங்க , உங்க பொண்ணு நம்பர் கொடுங்க நான் பேசுறேன் என்று கூறுகிறார்.

 இதை மறைந்திருந்து பார்த்த வித்யா அதான் பக்கத்து ரூம்லயே இருக்கியேடி அப்ப ஏன் உன் நம்பர் கேக்குறா, ஆனா நீ சொன்னது சரிதாண்டி இப்படி துருவி துருவி கேள்வி கேக்குறா என்று சொல்ல அதற்கு கல்யாணி சும்மா விளையாடாதடி நானே பயத்துல நிண்டுட்டு இருக்கன் என்று சொல்லுகிறாள்.


மறுபுறம் எனக்கே நம்பர் தெரியாதுமா அவ கால் பண்ணுவாஅப்போ நா நம்பர் தாரன் என்று கல்யாணி அம்மா சொல்லுறாங்க. அதற்கு பிறகு மீனா கிட்ட சொல்லிட்டு புறப்படுகிறார்கள். அதற்கு பிறகு வீட்டுக்குள்ள போயிட்டு ரோகிணி மற்றும் வித்யா கதைச்சிட்டு இருக்காங்க. அப்போ விஜய்யா ரூம்க்கு வந்து உங்க பிரன்ஷிப்பை பார்த்தா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு என்று சொல்லிவிட்டு போகிறார்.


ரவி மாற்று சுருதி இடையில் இன்னும் வாய்தக்கம் போய்க்கொண்டு  இருக்கு எனக்கு ஒரு முடிவு சொல்லு என்று சுருதி பிடிவாதமா இருக்காங்க என்ன கல்யாணம் பண்ணிக்கோ என்று வற்புறுத்துறாங்க. உனக்கு நாளைக்கு மட்டும் தான் டைம் அதுக்குள்ள ஒரு முடிவை சொல்லு என்று கூறி போய்விடுகிறாள்.


ஒருபுறம் சுருதி வற்புறுத்தினாலும் ரவி தனது வீட்டு நிலைமை பற்றி யோசிக்கிறார். ரவிய பார்க்க போக சுருதி ரெடியாகிட்டு வெளிய வரும் போது சுருதிக்கு பேசிய மாப்பிளை வீட்டுக்கு வந்துவிடுகிறார். அவளோட விருப்பம் இல்லாமலே பேசிய மாப்பிளை ஓட சுருதிவெளிய கிளம்புகிறாள். அவள் எதிர் பார்க்காத நேரத்தில் ரவி வருகிறான் இதனை பார்த்து சுருதி சந்தோசம் படுகிறாள் இத்தோடு இன்றைய  நாள்  எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement