தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அதில் ரோகிணி தான் மனோஜ்ஜிடம் எல்லா உண்மையையும் சொல்லப் போகிறேன், அதற்கு அப்புறமாக மனோஜ் என்ன முடிவு எடுத்தாலும் பரவாய் இல்லை என்று கூறி மனோஜ்ஜிற்குப் போன் பண்ணுகின்றார்.
போன் பண்ணி "மனோஜ் உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும் மனோஜ், எனக்கு இதற்கு முன்னாடி ஒரு தடவை கல்யாணம் ஆகிடுச்சு, ஒரு குழந்தையும் இருக்கு, பேரு க்ரிஷ், என் லைப்பை நான் உன் கூட வாழணும் என்று நினைக்கிறேன்" எனக் கூறுகின்றார்.
அந்த சமயத்தில் போன் கட் ஆகின்றது, பின்னர் இதற்கு அப்புறமாக மனோஜ் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏத்துக்க நான் ரெடி என ரோகிணி கூறுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
Listen News!