• Sep 21 2024

சேட்டு மனைவியை கத்தி முனையில் வைத்து மிரட்டிய ரோஹித்.. வெண்பாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியல் கடந்த ரி.ஆர்.பி ரேட்டிங்கிலும் ரொப் 5 இற்குள் வந்தது.இவ்வாறு இருக்கையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

வீட்டுக்கு வந்த ரோஹித்தை பிராடு, 420 என வெண்பா திட்டி தீர்க்க உனக்காக ரூ 25 லட்சத்தில் வைர நகை வாங்கி வந்த என்னை பார்த்து இப்படி சொல்லிட்டியே என வைர நகையை கழுத்தில் போட்டு விடுகிறார்.

அதன் பின்னர் வெண்பா இன்னும் ரோஹித்தை நம்பாமல் வழக்கமாக நகை வாங்கும் கடையில் இருந்து ஒருவரை அழைத்து அது வைரமா? போலியா? என பரிசோதனை செய்ய சொல்கிறார். அந்த சேட்டு இந்த நகையை கொடுத்தது யார் என கேட்டதும் ரோஹித் சிக்கிட்டான் என நினைத்து அவரை கீழே வர வைக்கின்றார்.

ஆனால் சேட்டு இது எங்கும் கிடைக்காத ஒரிஜினல் கோகினூர் வைரம் என சொன்னதும் வெண்பா ஷாக்கடைகிறார். ‌ அதன் பின்னர் ரோஹித் வெண்பா இப்படி செய்வாரென தெரிந்து நண்பனை வைத்து சேட்டு மனைவியை கத்தி முனையில் வைத்து மிரட்டி இவ்வாறு பேச வைத்தது தெரிய வந்தது.

இவ்வாறு இருக்கையில் இன்னொரு பக்கம் கண்ணம்மாவை தனியாக சந்தித்து ஜானுவின் கணவர் அவளுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் என்கிட்ட மட்டும் சொல்லுங்க, அவ கிட்ட சொல்ல வேண்டாம் என சொல்ல இருவரின் பாசத்தை கண்டு வியக்கிறார் கண்ணம்மா. அத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement