நடிகர் ரஜினி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பற்றி பேசிய கருத்துகள் ஆளும் கட்சியான் YSR காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் எதிர்ப்புக்கு காரணமாகி இருக்கிறது.
அத்தோடு அமைச்சரான நடிகை ரோஜா ரஜினியை இது பற்றி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
ரஜினி ஒரு ஜீரோ என அவர் கூறிய கருத்து ரஜினி ரசிகர்களை டென்சன் ஆக்கி இருக்கிறது. #TeluguPeoplesWithRajinikanth என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆனது.
இவ்வாறுஇருக்கையில் மற்றொரு பேட்டியில் ரஜினியை மீண்டும் தாக்கி பேசி இருக்கிறார் ரோஜா.
"நான் அரசியலுக்கு 'வருகிறேன்.. வருகிறேன்..' என சொல்லிவிட்டு வராம ஓடியா போனேன்? ரஜினி அரசியலுக்கே வர முடியல, அவர் எதற்கு அரசியல் பேசுகிறார்?" என கோபமாக கேட்டிருக்கிறார் ரோஜா.
Listen News!