சன் டிவியில் கடந்த பல வருடங்களாக ஓடிகொண்டிருந்த ரோஜா சீரியல் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
அந்த தொடரில் நடித்த சிபு சூர்யனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
அடுத்து அவர் எந்த சீரியலில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் பலரும் எல்லோரும் வெயிட்டிங். அத்தோடு ரோஜா சீரியல் பிரியங்காவும் சிபுவும் அதே ஜோடியாக மீண்டும் வந்தாலும் கொண்டாட்டம் தான் என கூறி வருகிறார்கள்.
இவ்வாறுஇருக்கையில் தற்போது சிபு சூர்யன் விரைவில் ஜீ தமிழின் புது சீரியலில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை என சிபு விளக்கம் கொடுத்து இருக்கிறார். மேலும் அவர் இதுவரை எந்த ப்ராஜெக்ட்டிலும் கமிட் ஆகவில்லை என தெரிவித்து இருக்கிறார். அடுத்த ப்ராஜெக்ட் என்ன என விரைவில் அறிவிப்பேன் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
Listen News!