• Sep 20 2024

மகாபாரதத்தை படமாக்கப் போகும் ஆர் ஆர் ஆர் பட இயக்குநர்; புதிய வெளியான அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்திய பெருமைக்குரியவர் இயக்குநர் ராஜமௌலி. அதாவது இவர் மாவீரா, நான் ஈ, பாகுபலி என யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பிரமாண்டமான படங்கள் பலவற்றை இயக்கி திரையுலக சிகரம் தொடும் ஒருவராக மாறியுள்ளார்.

இப்படங்களில் 'பாகுபலி' 2015-ஆம் ஆண்டு வெளியாகி பெரியளவிலான வசூலை பெற்றுக் கொடுத்திருக்கின்றன.மேலும் இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களான பிரபாஸ், ராணா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதனை தொடர்ந்து வெளியாகி இருந்த 'பாகுபலி 2' ஆனது முதல் பாகத்தை விட அதிகளவு வசூலை பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது ராஜமவுலி இயக்கத்தில் சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாகி ரூ.1115 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அத்தோடு இவர் நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதோடு அதற்கான ஆரம்பகட்டப் பணிகளும் இடம் பெற்று வருகின்றன.

இந்நிலையில் இயக்குநர் ராஜமவுலி அவர்கள் மகாபாரதத்தை பற்றிய ஒரு படத்தை எடுக்கப் போவதாக முன்னரே கூறி இருந்த நிலையில் தற்போது இப்படத்தை அவர் கைவிட்டு விட்டதாக பலரும் கூறி வருகின்றனர். இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராஜமவுலி அவர்கள் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் " எனது கனவு படமான மாகாபாரதத்தை எடுக்க நிறைய நேரம் தேவைப்படுகிறது. கைவசம் உள்ள 3,4 படங்களை முடித்த பின்னர் அதைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன்" எனத் தெரிவித்து இருக்கின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement