• Sep 21 2024

தீபா வீட்டில் கார்த்திக்கை பார்த்து அதிர்ச்சியடைந்த ரூபஸ்ரீ- அபிராமியை ஏமாற்ற ஐஸ்வர்யா போட்ட புதிய திட்டம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


ஷு தமிழ்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் தான் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எப்பிஷோட்டில் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஆஸ்பத்திரியில் கார்த்திக் தீபாவிற்கு ட்ரீட்மெண்ட் பார்த்துக் கொண்டிருக்க அப்போது கார்த்திக்கு தீபா தான் தன்னை நெருப்பில் இருந்து காப்பாற்றிய உண்மை தெரிய வருகிறது.இதனால் கார்த்திக் நானே உங்களை வீட்டில் விட்டு விடுகிறேன் என தீபாவை அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். இந்த பக்கம் கார்த்திக்கை காணவில்லை என அபிராமி அருண், ஆனந்திடம் திட்டிக் கொண்டிருக்கிறாள்.


அடுத்து தீபா வீட்டிற்கு வரும் கார்த்திக் அவளது அப்பா, அம்மாவை பார்த்து அது இசை குடும்பம் என தெரிந்து கொள்கிறான். மேலும் தீபாவின் அப்பா நாதஸ்வர வித்துவான் என தெரிய வர அவரை வாசிக்க சொல்கிறான். அப்போது அங்கு வரும் ராஜ ஸ்ரீ ரூபாஸ்ரீ கார்த்திக் அங்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

இறுதியாக கார்த்திக் தனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிக்கும் இங்கு பாட்டு பாடிய ரூபா ஸ்ரீயின் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல தீபாவின் குடும்பத்தினர் வருத்தப்படுகின்றனர். கார்த்தி இப்படி சொன்னதைக் கேட்டு ரூபா ஸ்ரீ மற்றும் ராஜ ஸ்ரீ என இருவரும் சந்தோஷப்படுகின்றனர்.பிறகு தீபா வீட்டில் இருந்து கிளம்பி தனது வீட்டுக்கு வரும் கார்த்திக்கை பார்த்தவுடன் அபிராமி சந்தோசம் அடைகிறாள். மேலும் அபிராமியிடம் தன்னை காப்பாற்றியது தீபா என்றும் அவள் நல்லவள் என்றும் அவள் வீட்டிற்கு சென்று வந்தது பற்றி சொல்ல அபிராமி சந்தோஷப்படுகிறாள்.


அப்போது ஐஸ்வர்யா இந்த மாதிரி பெண்கள் காசுக்காக ஏமாற்றுபவர்கள், பார்த்து ஜாக்கிரதையாக பழக வேண்டும் நல்லவர்கள் போல் பழகி பின்னால் நம்மளை ஏமாற்றுவார்கள் என்று சொல்ல அபிராமியும் ஐஸ்வர்யா சொல்வதில் நியாயம் இருக்கிறது. இந்த காலத்தில் ஜாக்கிரதையாக பழக வேண்டும் என்று கார்த்திக் சொல்ல கார்த்திக் இல்லம்மா தீபாவையும் தீபா குடும்பத்தையும் நல்ல குடும்பம் என்று சொல்ல ஐஸ்வர்யா மீண்டும் எச்சரிக்கிறாள்.

பின்னர் அபிராமி கோவிலுக்கு சென்று இருக்கும் நேரத்தில் அந்த வீட்டிற்கு ஐஸ்வர்யா பார்த்த பெண் நிகிதா வர அவளை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறாள். அபிராமி கோயிலுக்கு சென்றிருப்பதால் நிகிதாவைத் அழைத்து வந்து அபிராமி அத்தை வரதுக்குள்ள நீ பூஜை ரூம் சென்று சாமி பாட்டு பாடு அத்தைக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்கிறாள்.

ஆனால் நிகிதா எனக்கு சாமி பாட்டு பாட தெரியாது என்று சொல்ல ஐஸ்வர்யா எனக்கு உனக்கு பாட்டு பாட தெரியாது என்று தெரியும் நான் ரேடியோ ஆன் செய்கிறேன். நீ வாயை அசைத்தால் மட்டும் போதும், அத்தை அதை பார்த்து நம்பி உள்ளவர்கள் என்று சொல்ல அதை மறைந்திருந்து மீனாட்சி கவனிக்கிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது பற்றி அறிய கார்த்திகை தீபம் சீரியலை ஷு தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement