• Sep 20 2024

இசை ஜாம்பவான்கள் ஒன்றிணைந்து சிறப்பித்த எஸ். பி. பி 75 என்னும் புதிய நிகழ்ச்சி-உணர்ச்சி வசமிக்க புரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது வசீகரக் குரலால் பல ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட மூத்த பாடகர் தான் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் தீராத துயரத்தை ஏற்படுத்தியது.

அவர் மறைந்து ஒரு ஆண்டுக்கும் மேலானாலும், அவ்வப்போது அவர் பற்றிய நினைவுகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அனைத்து இசை ஜாம்பவான்களும் சேர்ந்து எஸ். பி.பியின் 75 வது பிறந்த தினத்தை கொண்டாடும் முகமாக இசைக் கச்சேரி ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.

இந்த உணர்ச்சி மிக்க நிகழ்ச்சியினை விஜய் தொலைக்காட்சியில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பப்படவுள்ளது. இது குறித்த புரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement