விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.தற்போது தமிழில் 6வது சீசன் ஒளிபரப்பாகி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இவ்வாறுஇருக்கையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார்.அத்தோடு அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார் தனலட்சுமி. அதாவது சர்ப்ரைஸாக வீட்டுக்குள் வந்த தனாவிடம் போட்டியாளர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, மைனா,"ரம்யா கிருஷ்ணன் மேம் நீ வெளியே போனதுனால ஃபீல் பண்ணாங்களாம்" என தனலட்சுமியிடம் சொல்கிறார். அங்கிருந்த ஷிவின்,"ஆமா, ஐஸ்வர்யா ராஜேஷ் வந்தப்போ சொன்னாங்க. நீ எவிக்ஷன் ஆனப்போ ரம்யா கிருஷ்ணன் மேடம் கவலைப்பட்டாங்கன்னு" என்று சொன்னார்.
இதற்கு பதில் அளிக்கும் தனா," ஆமா பார்த்தேன். நல்ல ரீச் கிடைச்சிருக்கு. டைட்டில் வின் பண்ணிருந்தா கூட இதெல்லாம் கிடைச்சிருக்குமா தெரியல" என்று கூறினார். இதனிடையே அங்கு வரும் அசீமிடம்," உள்ள என்னைப்பத்தி எல்லோரும் பேசுனதை பார்த்தேன். நல்லவேளை நல்லபடியா பேசிருக்கீங்க" என சிரித்தபடியே தனா சொல்ல," ஆமா, நாங்க எல்லோரும் உன்ன பத்தி பாசிட்டிவா தான் பேசுனோம்" என்கிறார் அசீம்.
இதன் பின்னர் அங்கு வரும் விக்ரமனிடம் பேசும் தனா," அண்ணா, எல்லாம் சிறப்பா இருக்கு" எனச் சொல்ல விக்ரமன் வாழ்த்து தெரிவிக்கிறார்.
Listen News!