• Sep 20 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தவர்.

வெள்ளி திரையை தொடர்ந்து சின்ன திரையிலும் மின்னுகின்றார் குஷ்பூ.சிவகாமி தொடரில் ஜோதி என்ற பாத்திரத்திலும், நந்தினி சீரியலில் பார்வதி என்ற பாத்திரத்திலும், மகாலட்சுமி என்ற பாத்திரத்தில் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலிலும் குஷ்பு நடித்துள்ளார் கடைசியாக மங்கலம் என்ற கதாபாத்திரத்தில் கோகுலத்தில் சீதை சீரியலில் குஷ்பு நடித்து இருந்தார்.

இவர் தற்பொழுது கலர்ஸ் தமிழில் உளிபரப்பாகி வரும் மீரா எனும் தொடரில் நடித்து வருகின்றார்.

அந்த தொடரில் மீரா எனும் கதாப்பாத்திரத்தில் குஷ்பு நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகர் சுரேஷ் மேனன் நடிக்கிறார்.

குடும்பத்தில் கணவன்-மனைவிக்கு இடையேயான கசப்பான-இனிப்பு உறவையும், அவர்கள் பிரிந்த வாழ்ந்து வரும் வருடங்களை பற்றி விரிவாக சொல்லப்படும் இந்த சீரியல் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்துவிட்டது 

மீரா சீரியலில் இருந்து திடீரென சுரேஷ் சந்திர மேனன் விலகியுளளார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறிவிட்டதாக கூறப்படும் நிலையில், இனி வரும் எபிசோட்களில் அவருக்குப் பதிலாக சுரேஷ் பாபு ‘கிருஷ்ணா’ கேரக்டரில் நடிக்கின்றார்.

இந்த சீரியலின் எழுத்தாளராக குஷ்புவே காணப்படுகின்றார்.இந்நிலையில் கடந்த மார்ச் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ் தொடர் இந்த மாத இறுதியில் நிறைவடையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement