• Sep 20 2024

குழந்தை பெற்று கொள்ள மாட்டேன் என கூறிய ராம்சரணின் மனைவி -விருது கொடுப்பதாக கூறிய சத்குரு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் ராம்சரண்.

இவரின் திருமணமாகி உபஸ்னா எனும் மனைவி உள்ளார்.இவர் சமீபத்தில் சத்குரு உடன் உரையாடினார். அப்போது தான் குழந்தை பெற்றுக்கொள்ளாதது பற்றி பேசி இருக்கிறார் அவர்.

"நான் திருமணம் செய்து 10 வருடங்கள் ஆகின்றது. மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். குழந்தைகள் பெற்று கொள்ளவில்லை. ஆனால் எல்லோரும் என்னுடைய RRR பற்றி கேள்வி கேட்கிறார்கள். Relationship, Ability to Reproduce, Role in Life ஆகியவற்றை பற்றி எல்லோரும் கேட்கிறார்கள் என ராம் சரண் மனைவி குறிப்பிட்டு இருக்கிறார்.

அதற்கு பதிலளித்த சத்குரு உபஸ்னாவுக்கு விருது கொடுப்பதாக கூறி இருக்கிறார். "குழந்தை பெற முடிந்தும் வேண்டாம் என சொல்லும் பெண்களுக்கு விருது கொடுக்கிறேன். நீங்க புலியாக இருந்தால் நிச்சயம் குழந்தை பெற வேண்டும் என சொல்ல இருப்பேன். ஏனென்றால் புலி அழியும் கட்டத்தில் இருக்கிறது."

"ஆனால் மனிதன் அப்படி இல்லை, இன்னும் 30-35 வருடங்களில் 10 பில்லியன் என்ற மைல்கல்லை மக்கள் தொகை தொட்டுவிடும். அப்படி இருக்க மக்கள் தொகை குறைந்தால் குளோபல் வார்மிங் குறையும்" என குறிப்பிட்டு இருக்கிறார்.

அதற்கு உபஸ்னா "என் அம்மாவும், மாமியாரும் உங்களுக்கு கண்டிப்பாக கால் பண்ணுவாங்க" என காமெடியாக தெரிவித்து இருக்கிறார்.

பிற செய்திகள்

Advertisement

Advertisement