• Sep 20 2024

சூர்யா-ஜோதிகா விற்கு மறுபடியும் நன்றி கூறிய சாய் பல்லவி…காரணம் இதுதானா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் டாப் நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் 2015-ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக மாறிய 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் மட்டுமன்றி பல மொழிகளிலும் பிரபலமானார். அன்று தொடக்கம் இன்று வரை முன்னணி நாயகிகளில் ஒருவராகவே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் இவரின் நடிப்பில் தற்போது 'கார்கி' என்ற படம் ஜூலை 15-ஆம் திகதி முதல் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தினை சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்து இருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை இப்படம் பெற்றிருந்தது.

அதுமட்டுமன்றி மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பினையும், சிறந்த விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றது. இதற்காக நடிகை சாய் பல்லவி மறுபடியும் சூர்யா-ஜோதிகா தம்பதியினருக்கு தனது நன்றியினைத் தெரிவித்து இருக்கின்றார். அதாவது இது தொடர்பாக அவர் கூறுகையில் "சார் உங்கள் உதவியால் தான் கார்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. ஜோதிகா மேடத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் " எனத் தெரிவித்து இருக்கின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement