• Sep 20 2024

தன்னுடைய அதிஷ்டத்தை நடிகர் ராணாவுக்கு கொடுப்பாரா சாய்பல்லவி-பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனது இயல்பான நடிப்பினாலும் நடனத்தினாலும் ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. தமிழ் நடிகையான இவர் தமிழில் சரியான படவாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு ,மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தினை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கின்றது. இது தவிர தெலுங்கில் ராணாவுடன் இணைந்து அவர் நடித்துள்ள விராட பருவம் படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது.

2020 கொரோனா காலகட்டத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட இப்படம் சில பிரச்னைகளால் தாமதமாகி வந்தது . இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அப்படம் ரிலீஸிற்கு தயாராகி உள்ளது.

சமீபகாலமாக தெலுங்கில் ராணா நடித்து வரும் படங்கள் தோல்வியை தழுவி வருகின்றன. அதேசமயம் சாய்பல்லவி நடிக்கும் படங்கள் வரவேற்பை பெறுகின்றன. இப்படியான நிலையில் இந்த படம் சாய் பல்லவிக்கு மட்டுமல்லாது தனக்கும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கிறார் ராணா.

நக்சல் தொடர்பான கதையில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த படம் ஜூன் மாதம் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement