• Sep 20 2024

டிசைனருடன் உறவு கொண்டதை கூறிய சாயிஷா ஷிண்டே… நிகழ்ச்சியிலிருந்து திடீர் வெளியேற்றம்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போன்றே இந்தியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி லாக் அப். இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகையான கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஜெயிலில் இருந்து தப்பிக்க தங்களின் வாழ்க்கையிலுள்ள ஒரு ரகசியத்தை கூற வேண்டும். இதுவரை ஒளிபரப்பான பல எபிசோடுகளில் பல பிரபலங்கள் குறித்த ரகசியங்கள் வெளியாகியுள்ளது.

அம்மாவின் தோழியுடன் உறவு கொண்டது, தொழில் அதிபர் மனைவியுடன் உறவு கொள்ள செய்து அதனை பார்த்து ரசித்தது, இயக்குநரால் கர்ப்பமாகி கலைத்தது என நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆண் பெண் போட்டியாளர்களான பிரபலங்கள் தங்களின் ரகசியங்களை கூறி பகீர் கிளப்பி வருகின்றனர்.

மேலும் அந்த வகையில் ஃபேஷன் டிசைனருடன் உறவு கொண்ட ரகசியத்தை கூறி மிரள வைத்தவர் சாயிஷா ஷிண்டே. திருநங்கையான சாயிஷா ஷிண்டடேவும் ஒரு ஃபேஷன் டிசைனர்தான். இந்நிலையில் தான் பங்கேற்ற ஃபேஷன் ஷோவிற்கு வந்த டிசைனர் ஒருவர் தன்னிடம் பேச வேண்டுமென தனது ஹோட்டல் அறைக்கு அழைத்து தன்னுடன் உறவு வைத்துக் கொண்ட விசயத்தை கூறினார்.

இந்நிலையில் சாயிஷா ஷிண்டே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும் அவர் குறைந்த வாக்குகளை பெற்றதால் அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதனிடையே லாக் அப் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement