பயில்வான் ரங்கநாதன் திரையுலகப் பிரபலங்கள் பலரையும் பற்றி தவறாகப் பேசி வருகின்றார். இவர் இப்படி பேசிக்கொண்டிருப்பதால் பத்திரிகையாளர்களுக்குத்தான் அவமானம் என்று பத்திரிகை உலகை சேர்ந்தவர்களே தங்களது கண்டனத்தை வெளிப்படையாக முன்வைப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.
ஆனாலும் பயில்வான் தனது போக்கை மாற்றிக்கொள்வதாக இல்லை. தொடர்ந்து அவர் பலரது அந்தரங்க விஷயங்களை பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.இந்நிலையில் புதிய வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் பயில்வான் ரங்கநாதன், "நடிகைகள் வெறும் கவர்ச்சியை மட்டும் காட்டக்கூடாது. நல்ல திறமை வேண்டும்.
நயன் தாராவை பாருங்கள் சில படங்களில் கவர்ச்சியாக நடித்தார். ஆனால் அவருக்கு திறமை இருந்ததால் கதையின் நாயகியாக இப்போது வளர்ந்திருக்கிறார். சாவித்திரி போன்றவர்கள் எல்லாம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிவிடுவார்கள். கடந்த 15 வருடங்களாக நடிகைகளே குத்தாட்டம் போடுகிறார்கள்.
நடிகைகளுக்கு இப்போது நடிப்பு மீது நம்பிக்கை போய்விட்டது. சதை மேல் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். கவர்ச்சியை குடும்பத்தோடு ரசிக்கலாம். ஆபாசத்தை அப்படி ரசிக்க முடியாது. அந்த கால நடிகைகளான பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி, தேவிகா போன்றோர் மஞ்சள் உள்ளிட்டவைகளை வைத்து இயற்கையான மேக்கப் போட்டுக்கொண்டவர்கள்.
ஆனால் இப்போது உள்ளவர்கள் எல்லாம் அமெரிக்காவில், லண்டனில் என்ன மேக்கப் பொருள்கள் இருக்கிறதோ அதை வாங்கி பயன்படுத்துகிறார். அந்த ஊர் சீதோஷ்ண நிலைக்கு அதெல்லாம் ஒத்துவரும். ஆனால் இங்கு எப்படி ஒத்து வரும். ரசாயன பொருள்கள் கலந்த மேக்கப்புகளை போட்டால் முக பாவனை வராது. ஆண்ட்ரியா, சமந்தா, நயன்தாரா போன்றோர் தங்களது முக பொழிவை இழந்துவிட்டதற்கு காரணம் ரசாயன பொருள்கள் கலவை மிகுந்த மேக்கப்புகள்தான்" என்றார்.
Listen News!