தன் தாயுடன் தற்போது ஹைதராபாத்தில் ஒரு வீட்டை வாங்கி குடியேறியிருக்கும் சமந்தா அவரது சொந்த ஊரான சென்னையில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சமந்தா இன்று தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கின்றார். அத்தோடு பல தடைகள் மற்றும் போராட்டங்களை கடந்து சாதித்த சமந்தா தற்போது மேலும் ஒரு சோதனையை கடந்து வருகின்றார்.
மயோசிட்ஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா மெல்ல மெல்ல அதில் இருந்து குணமடைந்து வருகின்றார். அத்தோடு சில மாதங்களுக்கு முன்பு தன் கைகால்களை தூக்க முடியாமல் சமந்தா அவதிப்பட்டு வந்தார். அந்த சமயத்தில் கூட சமந்தா தன் பட ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு தன் மனதைரியத்தை உணர்த்தினார்.எனினும் இதைத்தொடர்ந்து தொடர் சிகிச்சையில் ஈடுபட்டு வந்த சமந்தா தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகின்றார். இந்நிலையில் சமந்தா கதையின் நாயகியாக நடித்த யசோதா என்ற பிரமாண்டமான திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
சமந்தா தற்போது ஹைதராபாத்தில் ஒரு வீட்டை வாங்கி அதில் தன் தாயுடன் குடியேறியுள்ளார். அங்கேயே சிகிச்சை பெற்று வரும் சமந்தா தன் துணைக்காக தன தாயை கூடவே வைத்துள்ளாராம்.
இவ்வாறுஇருக்கையில் தன் சொந்த ஊரான சென்னையில் தன் தாய்க்காக ஒரு பிரம்மாண்டமான வீட்டை வாங்கியுள்ளாராம் சமந்தா. என்னதான் ஹைதராபாத்தில் வீடு வாங்கினாலும் தன் தாயின் சொந்த ஊரில் அவருக்காக ஒரு வீட்டை வாங்கி தன் தாய்க்கு கொடுத்துள்ளார் சமந்தா.
இந்நிலையில் தன் காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்த பின்னர் சமந்தாவிற்கு அவரது தாய் தான் பக்கபலமாக இருந்துள்ளார். தன் கஷ்டகாலங்களில் தன் உடன் இருந்த தன் தாய்க்காக இதுகூட செய்யவில்லை என்றால் அது நியாயமே இல்லை என உணர்ந்த சமந்தா, தன் தாய்க்காக அவரது சொந்த ஊரில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.
அத்தோடு ஷூட்டிங் இல்லாத சமயத்தில் தன் தாய் மற்றும் குடும்பத்துடன் சென்னையில் இருப்பதாக சமந்தா முடிவெடுத்துள்ளார். இதையடுத்து சமந்தா தற்போது உடல்நலம் தேறி தன் தாய்க்காக சென்னையில் வீடு வாங்கியதற்காக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Listen News!