தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதிலிருந்து தனது சினிமா வாழ்கையில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால், அவர் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார்.
சமந்தா தற்போது நடிகர் வருண் தவானுடன் ‘சிட்டாடல்’ வெப் தொடரின் படப்பிடிப்பில் இருக்கிறார். ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே ஆகியோர் வெப் சீரிஸை இயக்குகிறார்கள்.
தற்போது, சமந்தா நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியதும் அதிக வருமானம் கிடைத்துள்ளது என்றும், அதனை வைத்து மும்பையில் பெரிய அடுக்குமாடி குடியிருப்பை சுமார் 15 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படி ஒரு செய்தி அண்மையில் வெளியானது. ஆனால், அது உண்மையா என்று தெரளிவாக தெரியவில்லை.
அந்த வகையில், அவர் தனது சமூக வலைதளப்பாக்கத்தில், கடைசியாக வெளியிட்ட புகைப்படம் மும்பையில் உள்ள அவரது புதிய வீட்டில் எடுக்கப்பட்டதாக யூகங்கள் எழுந்துள்ளது. சமீபத்தில், சமந்தாவின் புதிய படமான சாகுந்தலம் பிப்ரவரி 17 அன்று வெளியிடப்படவிருந்தது, ஆனால் சில காரணங்களால் தேதி குறிப்பிடாமல், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதற்கிடையில், சமந்தா இந்தி படங்களில் நடிக்க விரும்புவதாகவும், அக்ஷய் குமாருடன் ஒரு படத்தில் கூட ஒப்பந்தமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!