தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.
மேலும் இவர் நடிப்பில் தற்போது யசோதா, குஷி, சகுந்தலம் என மூன்று திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. அடுத்தபடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்.
ஏற்கனவே தி பேமிலிமேன் வெப் சிரிஸ் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு அறிமுகமான சமந்தா, அதன்பிறகு புஷ்பா பட பாடல் மூலமும் ஹிந்தி ரசிகர்களை கவர்ந்தார்.
இந்தநிலையில் தற்போது டாப்சி தயாரிக்கும் படம் உள்பட சில படங்களில் அவர் அடுத்தடுத்து ஹிந்தியில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால் ஹிந்தியில் தான் அறிமுகமாகும் படம் குறித்த தகவல்கள் வெளியாவதற்கு முன்பே அங்குள்ள முக்கிய ஊடகங்களில் தோன்றி கலக்கி வருகின்றார் சமந்தா.
அத்தோடு பத்திரிகை அட்டைகளை அலங்கரிப்பது முதல் டாக் ஷோக்களில் பங்கேற்பது மற்றும் பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வது என்று மும்பையின் பொழுதுபோக்கு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், தற்போது பாலிவுட்டில் வெளியாகியுள்ள ஒரு செய்தியில், தற்போது ராஷ்மிகாவின் கைவசம் நான்கு படங்கள் இருப்பதைப்போன்று விரைவில் தான் கமிட்டாகியுள்ள படங்கள் குறித்த தகவலையும் சமந்தா அறிவிக்கப்போகிறார்.மேலும் அப்படி அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும்போது பாலிவுட் முன்னணி நடிகைகளையே அதிர விடும் வகையில் சமந்தாவின் பாலிவுட் என்ட்ரி பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிற செய்திகள்
- நீங்களா அதுக்கு காசு குடுத்தீங்க…ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த குஷ்பூ
- நயன்தாரா குறித்து சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்–கொந்தளிக்கும் ரசிகர்கள்..!
- இயக்குநர் ஷங்கர் பட பெயரில் நடந்த மோசடி…நடந்தது என்ன..?
- சீரியலில் மட்டும் தான் அடக்கம்-கவர்ச்சியில் அதகளம் காட்டும் ப்ரியங்கா குமார்..!
- பிள்ளை மீது சத்தியம் செய்து உண்மைகளை சொன்ன ராதிகா.. பாக்கியா எடுத்த முடிவு – இன்றைய எபிசோட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!