சென்னையை சேர்ந்த பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷன் மூலம் டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பானா காத்தாடி, நான் ஈ, மாஸ்கோவின் காவேரி என நடித்து வந்த சமந்தா விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் என பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தற்பொழுது பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் இவருக்கு எதிர்பாராத விதமாக தசை அழற்சி நோய் எனும் மயோசிடிஸ் பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் அந்த நோயுடன் பெரும் போராட்டத்தையே சந்தித்த சமந்தா யசோதா படத்தின் ப்ரோமோஷனுக்காக நோய் பாதிப்புடனே கலந்து கொண்டு கண்ணீர் சிந்தியது ரசிகர்களை உலுக்கியது.
ஆனால், மீண்டும் தன்னால் பழைய படி நடிக்க முடியும் என கடுமையாக வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களையும், பாக்ஸிங் செய்யும் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் சமந்தா.பாலிவுட்டில் வருண் தவான் உடன் இணைந்து சிட்டாடல் எனும் வெப்சீரிஸில் இணைந்துள்ள சமந்தா, விஜய் தேவரகொண்டா உடன் குஷி படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குதிரை மீது சவாரி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார். இவர் நடிப்பில் உருவாகி உள்ள சாகுந்தலம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி வெளியாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!