• Sep 20 2024

மீண்டும் இணையவுள்ள சமந்தா-நாக சைதன்யா ஜோடி... இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து எதற்குமே அஞ்சாத ஒரு சிங்கப் பெண்ணாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றார். சினிமா வாழ்க்கையிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி பல தோல்விகளைச் சந்தித்து இருக்கின்றார்.


இவர் தெலுங்கில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த  2010-ஆம் ஆண்டு வெளியான 'Ye Maaya Chesave' என்ற படத்தில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த போது இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருங்கிய நட்பு பின்னர் காதலாக மாறியது. 

இதனைத் தொடர்ந்து சில வருடங்கள் டேட்டிங் செய்த இந்த ஜோடி கடந்த 2017 ஆம் ஆண்டு தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்தனர். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ந்து தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.


திருமணத்திற்குப் பின்னர் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை இவருக்கு ஏற்படுத்தியது என கூறலாம். ஏனெனில் பல நடிகைகள் ஏற்று நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை கூட 'சூப்பர் டீலக்ஸ்' என்ற படத்தில் ஏற்று நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றார்.


இவ்வாறாக சமந்தாவின் திரையுலக வாழ்க்கையும், திருமண வாழ்க்கையும் ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீர் என தன்னுடைய சமூக வலைதள பக்கங்கள் அனைத்திலும் இருந்து, சமந்தா தன்னுடைய குடும்ப பெயரான அக்கினேனி என்ற பெயரை உடனடியாக நீக்கினார். 

இதனால் இவர்கள் இருவரும் தங்களுக்கிடையே நடந்த கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகி இருந்தான். ஆனால் இவருமே இது குறித்து பல நாட்களாக வாய் திறக்காத நிலையில் திடீர் என கடந்த ஆண்டு சமூக வலைத்தளத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக கூறி ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தனர்.


இந்த திடீர் விவாகரத்துக்கு பின்னர் இவர்களுடைய பிரிவுக்கு காரணம் என்ன என்று சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய விவாதமே நெட்டிசன்களுக்கிடையில் சென்றது. இது தொடர்பாக பல்வேறு வதந்திகளையும் பரப்பி வந்தனர். இதற்கு சமந்தா தன்னுடைய அறிக்கை மூலம் பதிலடி கொடுத்து பேசியவர்களின் வாயை அடைத்தார்.

விவாகரத்திற்குப் பின்னரும் இருவருமே தொடர்ந்து தத்தமது திரைப்பட பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சமீபத்தில் நடிகை சமந்தா தனக்கு ஆட்டோ இம்மியூன் பிரச்சனை உள்ளதாக கூறி மறுபடியும் ரசிகர்களை அதிர வைத்தார். 

மேலும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவை மருத்துவமனைக்கு அவரது முன்னாள் கணவர் நாகசைதன்யா நேரில் சென்று நலம் விசாரித்ததாகவும், அந்த சந்திப்பின் போது இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டு விட்டு மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும் கூறி பல செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால் இந்த தகவல் யாவும் வதந்தி என்று சமந்தா தரப்பில் இருந்து பதிலடியாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும், விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக சில தகவல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

ஆனால் இது குறித்து எவ்வித அதிகார பூர்வ தகவலும் இதுவரையிலும் வெளியாகவில்லை. இதனால் அதிகாரபூர்வ அறிவிப்பினை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement