சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்க “சகுந்தலம்” திரைப்படம் உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.
சகுந்தலம் திரைப்படத்தை இயக்குநர் குணசேகர் எழுதி இயக்குகிறார்.இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா, இப்படத்தை தயாரிக்கிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார்.இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா இந்த படத்தில் அறிமுகமாக உள்ளார்.சமந்தா, தெலுங்கில் 'குஷி' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். படிக்கட்டுகளில் ஏறி சூடம் மற்றும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்துள்ளார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. சமந்தாவுடன் 96 பட இயக்குநர் பிரேம் குமார் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர். செய்தியாளர்களை சந்தித்த சமந்தா உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட பிறகு தற்போது கடவுளின் அருளால் மருத்துவர்கள் ஆலோசனையில் உடல் நலம் பெற வேண்டுதல்களை நிறைவேற்ற பழனி முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்ததாக கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!