தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகை தான் சமந்தா. இவரது நடிப்பில் இறுதியாக கடந்த நவம்பர் 11-ந் தேதி யசோதா திரைப்படம் வெளியானது. இப்படத்தில் வாடகைத் தாயாக நடித்திருந்தார் .
இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டி வந்தது. குறிப்பாக வெளியான 10 நாட்களில் யசோதா திரைப்படம் உலகளவில் ரூ.33 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும் இப்படம் வெளியாவதற்கு முன்னர் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா சில மாதங்களாக மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தற்பொழுது அதிலிருந்து குணமடைந்த வருவதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு அந்தப் பேட்டியில் அவர் கண்ணீர சிந்திப் பேசியது ரசிகர்களை கடும் சோகத்திற்குள் தள்ளியது
இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது. இருப்பினும் சமந்தா தரப்பில் இருந்து இதுகுறித்த எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!