தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா.இவர் 'பேமிலிமேன் 2' என்ற வெப் தொடரில் நடித்து ஹிந்தி சினிமாவிலும் அறிமுகமாகினார். இந்த தொடரில் பெண் போராளியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
இதுதவிர புஷ்பா படத்தில் ஊ சொல்லுறியா மாமா என்னும் பாடலுக்கு நடனமாடி வேற லெவலில் பேமஸ் ஆன இவர் தற்பொழுது குஷி ,சகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து மீண்டும் ராஜ் மற்றும் டீ கே இயக்கும் ஹிந்தி வெப் தொடரில் நடிக்க இருக்கிறார்.
இந்திய அளவில் டாப் நடிகைகள் லிஸ்டில் சமந்தா தான் முதலிடம் பிடித்து வருகிறார்.இவ்வாறு இருக்கையில் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் ye maaya chesave என்ற படத்தின் ஷூட்டிங்கில் ஒன்றாக கலந்துகொண்டபோது தான் காதலில் விழுந்து அதன் பின் பல வருடம் உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் அவர்கள் கடந்த வருடம் திடீரென விவகாரத்தை அறிவித்து சினிமா உலகத்திற்கு கடும் ஷாக்கை கொடுத்தனர். அவர்கள் இடையே என்ன தான் பிரச்சனை என தற்போது வரை அவர்கள் வெளிப்படையாக கூறவே இல்லை.
சமந்தா மகாநடி ரிலீஸ் நேரத்தில் ஒரு பேட்டியில் நாக சைதன்யா கணவராக வந்தது அதிர்ஷ்டம் என தெரிவித்து இருந்தார். மேலும் அதற்கு முன்பு ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தது பற்றி சமந்தா பேசி இருக்கிறார்.
"நடிகை சாவித்ரி போல நானும் பிரச்சனைகள் சந்தித்திருப்பேன். ஆனால் நான் அதை உணர்ந்து அதில் இருந்து வெளியில் வந்துவிட்டேன். அந்த காதல் நல்ல வகையில் முடியவில்லை.ஆனால் எனக்கு நாக சைதன்யா போன்ற ஒரு கணவர் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்" என சமந்தா கூறி இருக்கிறார்.
Listen News!