தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய சகுந்தலம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருந்தாலும் ஹிந்தியில் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 தொடரில் நடித்து நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தார்.
தொடர்ந்து இவர் பான் இந்தியா நாயகியாக மாறியுள்ளார். தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து முடித்துள்ளார் சமந்தா. இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான வியூஸ்களையும் பெற்றுள்ளது. இந்தப் படம் செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
இப்படத்தினைத் தொடர்ந்து சிட்டாடல் இந்திய வெர்ஷனில் நடித்துள்ளார் சமந்தா. சிட்டாடல் தொடரில் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள நிலையில், அதன் பிரீமியரில் சமந்தாவும் நாயகன் வருண் தவானும் பங்கேற்று ட்ரெண்டிங்கில் இருந்தனர். இந்நிலையில் தற்போது சிட்டாடல் தொடரின் இந்திய வர்ஷனின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக சமூக வலைதளத்தில் நடிகை சமந்தா அப்டேட் தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.தன்னுடைய கடினமான நேரங்களை சிறப்பாக எதிர்கொள்ள காரணமாக இருந்த இந்த டீமிற்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா. மேலும் தன்னுடைய லைஃப்டைம் கேரக்டரை தனக்கு கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!