காதலித்து கல்யாணம் பண்ணிய நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து வாழ்ந்து வருகின்றமை நம் அனைவருக்கும் தெரியும்.
நாக சைதன்யாவை பிரிந்துவிட்டாலும் சமந்தா அவரின் தம்பி அகில் அக்கினேனியுடன் இன்றுவரை நட்பாகவே பழகி வருகின்றார். இருப்பினும் சமந்தாவும் நாக சைதன்யாவும் தனித்தனியாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாது தமது சினிமாக் கேரியரை முன்னெடுத்து செல்கின்றார்கள்.
மேலும் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் காதல் உறவில் இருப்பதாகவும் கிசுகிசுக்கள் அடிக்கடி வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. ஆனால் நடிகை சமந்தா இன்றுவரை தனது முன்னாள் கணவர் நாக சைதன்யா ஞாபகத்தில் தான் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது.
ஏனெனில் நாக சைதன்யாவை குறிப்பிடும் டாட்டூவை அவர் இன்னமும் தன் உடலில் இருந்து அகற்றவில்லை. அந்த டாட்டூவுடன் சமந்தா இருக்கும் புகைப்படம் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அவ்வாறே தற்போதும் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கின்றது.
Listen News!