தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா.இவர் 'பேமிலிமேன் 2' என்ற வெப் தொடரில் நடித்து ஹிந்தி சினிமாவிலும் அறிமுகமாகினார். இந்த தொடரில் பெண் போராளியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
இதுதவிர புஷ்பா படத்தில் ஊ சொல்லுறியா மாமா என்னும் பாடலுக்கு நடனமாடி வேற லெவலில் பேமஸ் ஆன இவர் தற்பொழுது குஷி ,சகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து மீண்டும் ராஜ் மற்றும் டீ கே இயக்கும் ஹிந்தி வெப் தொடரில் நடிக்க இருக்கிறார்.
இந்திய அளவில் டாப் நடிகைகள் லிஸ்டில் சமந்தா தான் முதலிடம் பிடித்து வருகிறார். பாலிவுட்டிலும் அக்ஷயுடன் இணைந்து ஒரு படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆட்டம் போட்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையடுத்து ஜுனியர் என்டிஆரின் அடுத்தப் படத்திலும் சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள நிலையில், ஜுனியர் என்டிஆர் -சமந்தாவிற்கு இந்தியளவில் உள்ள கிரேசை மையமாக வைத்து அவர்களை நடிக்க வைத்த இயக்குநர் திட்டமிட்டிருந்தாராம்.
ஆனால் இந்தப் படத்தில் நடிக்க சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கொரட்டாலா சிவா, சமந்தாவிற்கு 2 கோடி ரூபாய் சம்பளம் பேசிய நிலையில், சமந்தா 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் ஆனால் இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து இந்தப் படத்தில் நடிக்க சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தப் படத்தில் நடிக்க சமந்தாவிடம் டேட்ஸ் இல்லாத காரணத்தாலும் அவர் இந்தப் படத்தில் நடிக்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அத்தோடு எது எப்படியோ சமந்தா இந்தப் படத்தில் நடிக்காத நிலையில், அவருடைய ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதையடுத்து ஜுனியர் என்டிஆருடன் நடிக்கும் வாய்ப்பு அடுத்ததாக யாருக்கு போகும் என்பது அடுத்த கேள்வியாக உள்ளது.
Listen News!