தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது படங்களில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். இந்த ஆண்டு சமந்தா நடிப்பில் கடந்த 3 மாதங்களாக எந்த படங்களும் ரிலீசாகாமல் இருந்த நிலையில், இந்த மாதம் தமிழ் புத்தாண்டன்று அவர் நடித்த சகுந்தலம் திரைப்படம் வெளியாகியது.
சரித்திர கதையம்சம் கொண்ட திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆனது.இப்படத்தின் ரிலீசுக்கு முன் நடிகை சமந்தா இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரமோஷன் செய்தார். இருப்பினும் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
நடிகை சமந்தாவின் பிறந்தநாள் ஏப்ரல் 28-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ஆந்திர மாநிலம் பாபட்லாவில் உள்ள ஆலபாடு என்கிற கிராமத்தில் சமந்தாவின் தீவிர ரசிகரான தெனாலி சந்தீப் என்பவர் சமந்தாவுக்காக கோயில் கட்டி உள்ளார். இதனை சமந்தாவின் பிறந்தநாளில் திறக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சமந்தா படப்பிடிப்புத்தளத்தில் ரோப் கயிறு கட்டி சண்டைப் பயிற்சியினை மேற்கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படத்தினை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!