• Sep 20 2024

ஆடுகளம் பட நாயகியின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சமந்தா- வெளியாகியது உறுதியான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. இவரது நடிப்பில் தற்பொழுது சகுந்தலம் யசோதா ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இப்படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து வருகின்றார். இது தவிர வெப் சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்த நிலையில் இவர் பிரபல நடிகையில் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த டாப்ஸி தயாரிப்பில் தான் இவர் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது

நடிகையான டாப்ஸி காஞ்சனா, வந்தான் வென்றான், கேம் ஓவர், அனேபெல் சேதுபதி போன்ற இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை டாப்ஸி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். அதில் தான் சமந்தாவை கதாநாயகியாக நடிக்க வைக்கவுள்ளார் என்கிற தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார் டாப்ஸி.

இதன்மூலம் டாப்ஸின் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் சமந்தா என உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement