• Sep 20 2024

கீழே விழுந்து கதறி அழும் சந்தியா..பரபரப்பு திருப்பங்களுடன் இறுதி வாரத்தை எட்டிய ராஜராணி-2..வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  ராஜா ராணி -2 சீரியல் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. விக்கி கொலை செய்யப்பட்ட கேஷை சந்தியாவே விசாரித்து வருகின்றார்.

அதாவது மகளின் மானத்தை காப்பாற்ற சிவகாமி கொலை செய்து இருந்தாலும் அவருக்கு சார்பாக சரவணனே தான் தான் கொலை செய்ததாக ஒத்துக்கொண்டு கைது செய்யப்டுகின்றார்.

இவ்வாறு இருக்க இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்வதால் சரவணனுக்கு என்ன தீர்ப்பு வழங்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த சந்தியாவிடம் இனிமேல் உனக்கு இந்த வீட்டில் தங்க இடம் இல்லை என சந்தியாவின் மாமியார் சிவகாமி கூற அந்த இடத்திலே விழுந்து சந்தியா அழுகின்றார்.

அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement