• Sep 21 2024

சாமியாரை கையும் களவுமாக பிடிக்க சந்தியா போட்ட திட்டம்… ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2.இந்த சீரியல் தற்போது ரசிகர்களுக்கு ஏத்தாற் போல விறுவிறுப்பு கட்டத்தை நோக்கி நகருகின்றது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…..

வீட்டுக்கு வந்த சாமியாரை வரவேற்று உட்கார வைத்து அவருக்கு பாத பூஜை செய்து ஆசீர்வாதம் வாங்குகிறார் சிவகாமி.

இதன் பின்னர் சந்தியா சல்மா சொன்ன விஷயங்களை ஞாபகம் வைத்து அந்த கோவிந்தன் இவர்தான் என்பதை பரிசோதனை செய்து கண்டுபிடிக்க பக்கத்தில் இருந்த சிறுவனின் பெயரும் கோவிந்தன் என்பதால் கோவிந்தா என கூப்பிட சாமியாரின் முகம் மாறுகிறது.

இதன் பிறகு சொன்ன இடத்தில் வேறொரு சாமியார் கோவில் கட்ட போறதா மக்களிடம் பணம் வந்து இருக்கிறார் நீ சொன்ன கோவிந்தனும் இந்த சாமியாரும் ஒன்னு தான் என எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நீ சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒத்துப் போகிறது என சொல்லி அவருக்கு சில ஐடியா கொடுக்கிறார்.

பின்னர் சல்மா கோவிந்தனுக்கு போன் போட போனை அவருடைய சிஷ்யன் கட் செய்து கொண்டே இருக்கிறார். அத்தோடு போன் வருவதாக சொன்னதும் சாமியார் கோவில் வேலைகள் நிறைய இருப்பதாக சொல்லி அங்கிருந்து கிளம்பும் முயற்சி செய்ய சரவணன் அனுப்பி சந்தியா அவரை தடுத்து நிறுத்த வைக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement