பாலிவூட் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகர் தான் சஞ்சய் தத். பிரபலமான நடிகர் சுனில்தத்தின் மகனான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தன்னுடைய கெரியரை மொத்தமாக இழந்தார்.இருப்பினும் தந்தையின் பேச்சைக் கேட்டு குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டார்.
இவர் சமீபத்தில் வெளியான கேஜிஎப் படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால் இவர் சினிமாவைப் போலவே நிஜ வாழ்க்கையிலும் பல சர்ச்சைகளில் சிககி வந்தார். 1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடித்த சம்பவத்தில் ஆதாரம் இல்லாமல் வெடி குண்டு வைத்திருநந்ததால் கைது செய்யப்பட்டார்
இதன் பின்னர் கடந்த 2017ம் ஆண்டு இவர் மேலிருந்த அனைத்து குற்றங்களும் நீக்கப்பட்டது.இவரது வாழ்க்கை வரலாறை அனைத்து உலக மக்களுமே ஆர்வத்துடன் படித்து வந்தனர். அதன்படி அவரது வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிய சஞ்சய் என்னும் படத்தில் ரன்வீர் கபூர் நடித்திருந்தார்.
முக்கியமாக இவரது வாழ்க்கை வரலாற்றில் சுமார் 350 க்கு மேற்பட்ட பெண்களுடன் ரகசியமாக குடும்பம் நடத்தியிருந்தார் என்றும் கூறப்படுகின்றது. இவரே இந்த தகவலை கூறியதால் சமூக வலைத்தளங்களில் இந்த விடயம் வைரலாகி வருகின்றது.இது தவிர இவர் மூன்று திருமணங்கள் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!