விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியலில், செம்பா என்கிற கதாபாத்திரத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களையும், தன் பக்கம் கவர்ந்து இழுத்தவர் ஆல்யா மானசா.
இவர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்து வந்த, சஞ்சீவ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும், தொடர்ந்து இவர்கள் இருவரும் சீரியலில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதன்படி சஞ்சீவ் சன்டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்னும் சீரியலில் நடித்து வருகின்றார். அதே போல சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் ஆல்யா இன்றைய தினம் தன்னுடைய 28வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். அவருக்கு சஞ்சீவ் சூப்பரான சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோவை சஞ்சீவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!