சின்னத்திரையில் மத்தியில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானஷா. அதாவது இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருந்தார்கள் சஞ்சீவ் – ஆல்யா.
இந்த சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்து மக்கள் மத்தியில் தமக்கென ஒரு இடத்தை பிடித்தார்கள். அத்தோடு இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து ஒரு மகன் மற்றும் மகளுடன் சந்தோசமாக குடும்பம் நடாத்தி வருவதோடு தத்தமது கேரியரில் இருவரும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சஞ்ஜீவின் பிறந்தநாளை முன்னிட்டு காதல் மனைவி ஆலியா புதுக் கார் ஒன்றினைப் பரிசளித்திருக்கின்றார்.
இதனைத் தற்போது சஞ்சீவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ஆலியாவிற்கு நன்றி தெரிவித்திருக்கின்றார்.
Listen News!