சின்னத்திரையில் ரசிகர்களுக்கு ஏத்தாற்போல பல சீரியல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.
அந்தவகையில் ராதிகா அடுத்த கிழக்கு வாசல் என்கிற தொடரை தயாரிக்க இருக்கிறார். அதில் நடிகர் சஞ்சீவ் தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டது. ஹீரோயினாக ரேஷ்மா நடிக்கிறார் எனவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது சஞ்சீவ் சீரியலில் இருந்து விலகிவிட்டார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
இவ்வாறுஇருக்கையில் தற்போது சஞ்சீவுக்கு பதிலாக ஹீரோவாக யார் நடிக்க போவது என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
பூவே பூச்சூடவா தொடரில் ஹிட்டான ஜோடியான தினேஷ் மற்றும் ரேஷ்மா மீண்டும் இந்த தொடரில் ஜோடியாக நடிக்கிறார்களா என தகவலும் பரவி வருகிறது.
Listen News!