தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வந்தவர் தான் நடிகர் சந்தானம். இவர் தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து பிரபல்யமானவர்.ஜீவா, ஆர்யா, உதயநிதி ஆகியோரின் படங்கள் ஓடியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சந்தானம் தான் எனலாம்.
சந்தானம் சென்ற பின் இப்போது வரை தமிழ் சினிமாவில் காமெடிக்கான பஞ்சம் நிலவுகிறது என்பதை மறுக்கவே முடியாது. காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த இவர் தற்பொழுது கதாநாயகனாக களமிறங்கி நடித்து வருகின்றார்.இந்த நிலையில்தான் அவர் நடிப்பில் இறுதியாக வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்துள்ளது.
இதனால் சந்தானம் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சந்தானம் பற்றிய தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.அதாவது சந்தானம் சமீபத்தில் போயஸ்கார்டனில் ஒரு வீடு வாங்கியுள்ளார். அது அவருக்கு பல வருட கனவு என சொல்லப்படுகிறது. சந்தானம் சிறு வயது முதலே ரஜினியின் தீவிர ரசிகராக இருந்துள்ளார்.
பல்லாவரத்தில் தங்கியிருந்த அவர் ரஜினியை பார்ப்பதற்காக போயஸ்கார்டனுக்கு நண்பர்களுடன் செல்வாராம். அப்போது அந்த ஏரியாவை பார்த்து ‘இந்த ஏரியாவில் நமக்கும் ஒரு வீடு இருந்தால் எப்படியிருக்கும்?’ என யோசிப்பாரம். கடந்த சில வருடங்களாக அங்கே அவருக்கென ஒரு அலுவலகத்தை அமைக்கவும் அவர் முயற்சி செய்தார். ஆனால், வாடகை அதிகமாக இருந்ததால் அந்த எண்ணத்தை கைவிட்டாராம்.இதனால் தற்பொழுது புது வீடு வாங்கியுள்ளாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!