• Sep 20 2024

கன்னடத்தில் என்றியாகும் நடிகர் சந்தானம்..சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த படப்பிடிப்பு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா, என்ற நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் சந்தானம். தொடர்ந்து மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.

குறுகிய காலத்தில் விஜய், அஜீத், என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக ஜொலித்தார். இதையடுத்து நகைச்சுவை வேடங்களில் குறைத்துக் கொண்ட சந்தானம் தற்போது நடிகராகவும் நகைச்சுவையாளர் ஆகவும் கதாநாயகன் வேடத்தில் நடித்து வருகின்றார் இதையடுத்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர தமிழ் சினிமாவின் பிசியான ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

முதன்முதலில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இதை அடுத்து இனிமே இப்படித்தான், டகால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி என பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகர் சந்தானம் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்கு "குலுகுலு" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

லாரி டிரைவரின் ஒருவரின் கதையாக உருவாகும் இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில் இப்போது படத்தின் டப்பிங் பணிகளை சந்தானம் தொடங்கியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்று வருகிறது.

இதை அடுத்து உருவாகும் தமிழ் மற்றும் கன்னட படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இந்தப் படத்தை கன்னட இயக்குநர் பிரசாத் ராஜ் இயக்குகிறார். சந்தானம் 15 என்ற தற்காலிக தலைப்போடு இந்த படப்பிடிப்பு தற்போது தொடங்கி சத்தமே இல்லாமல் முழு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement