• Sep 20 2024

நயன் குறித்து யாருக்கும் தெரியாத ரகசியங்களை உடைத்த சரண்யா பொன்வண்ணன்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக 'ஐயா' படத்தில் அறிமுகமான நடிகை நயன்தாரா.இவர்  முதல் படத்திலேயே தன்னுடைய கொழுக்கு மொழுக்கு அழகால் தமிழ் ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றார்.


அத்தோடு பல முன்னணி நடிகைகள் நடிக்க ஏங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக தன்னுடைய இரண்டாவது  படமான சந்திரமுகி படத்தில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றிய நயன்தாரா, பல இளம் நடிகைகளை பொறாமை கொள்ள வைத்தார்.


அடுத்தடுத்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மட்டுமின்றி, பர்சனல் வாழ்க்கையிலும் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்த நயன்தாரா விடாப்பிடியாக திரையுலகில்  நின்று சாதித்தவர்.  அத்தோடு  இவரின் தைரியமும், இவர் கடந்து வந்த கரடு முரடான பாதைகளும் தான், இன்று நயன்தாராவை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கிற கோபுரத்தின் உச்சியில் அமர வைத்துள்ளது.


நடிகை நயன்தாராவை பொறுத்தவரை பிரபலங்கள் பலரும் கூறுவது போல் மிகவும் அன்பாக பழகக் கூடியவர். உதவி என யார் கேட்டாலும் தயங்காமல் செய்பவர் என்று கேள்விப்பட்டிருப்போம். அதை தவிர பலருக்கும் தெரியாத சில தகவல்களையும் தெரிவித்துள்ளார்  சரண்யா பொன்வண்ணன்.


நயன்தாராவுக்கு அம்மாவாக கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன், பேட்டியொன்றில்... நயன்தாரா பற்றி யாருக்கும் தெரியாத பல விஷயங்களை கூறி ஆச்சரியப்படுத்தி உள்ளார். அத்தோடு நயன்தாராவை பொறுத்தவரை அவர் முன்னணி நடிகையாக இருந்தாலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும், எப்போதுமே மிகவும் சாதாரணமாக பழகக்கூடிய சிறந்த நபரால்.

 தன்னை யாராவது எதிரியாக நினைத்தால் கூட, அவர் அவர்களிடம் இருந்து மிகவும் சைலன்டாக ஒதுங்கி விடுவாராம். அதற்கு காரணம் அகங்காரம் இல்லை, அவர்களை சமாளிக்க முடியாது என்று நினைத்து விலகி விடுவாராம். எனினும் அதேபோல் நயன்தாரா யாரிடமாவது பேசுவதை தவித்தால், அவர் நிச்சயம் ஒரு கெட்டவராக தான் இருப்பார் என்றும்... நயன்தாரா தன்னை பற்றியும் தவறாக பேசுபவர்கள் பற்றி எப்போதுமே கண்டு கொள்ள மாட்டார் என தெரிவித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன்.

மேலும்  இதில் ஏற்கனவே சில தகவல்களை டிடி உள்ளிட்ட பிரபலங்கள் நயன்தாரா குறித்து பகிர்ந்து கொண்டிருந்தாலும், சரண்யா பொன்வண்ணன் கூறியுள்ள சில தகவல்கள் யாருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது.அத்தோடு  இவர் நயன் குறித்து பகிர்ந்துள்ளதை கேட்டு, தலைவி எப்போதுமே வேறு ரகம் என கொண்டாடி வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.

 நயன்தாரா கடந்த ஆண்டு, தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில்... தற்போது அவருக்கு உயிர் - உலக் என இரு மகன்களும் உள்ளனர். ஒரு சிறந்த மனைவியாகவும், தாயாகவும் இருந்து குடும்பத்தையும் குழந்தைகளையும் வளர்த்து வருவதோடு, தன்னுடைய நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

எனினும் அந்த வகையில், நயன்தாரா தன்னுடைய 75 ஆவது படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக உள்ளது. அதை போல் ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர், எஸ் சுஷாந்த் இயக்கத்தில் டெஸ்ட் என்கிற படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி வைரலாக்கியது. அத்தோடு இந்த படத்தில் முதல் முறையாக மாதவன் மற்றும் சித்தாத்துடன் நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement