தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் சரண்யா பொன் வண்ணன். முதல் படத்திலேயே தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.பின்னர் மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, மேளம் கொட்டு தாலி கட்டு, சிவப்பு தாலி, என அடுத்தடுத்த படங்களில் படு பிஸியான நடிகையாக மாறினார்.
தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.இவர் நடிகர் பொண்வண்ணனைக் காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு பெணண் பிள்ளைகளும் இருக்கின்றனர்.
தன்னுடைய குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுத்த இவர் தற்பொழுது முன்னணி நடிகர்களின் அம்மாவாகவும் நடித்து வருகின்றார்.திரையுலகில் ஒரு பக்கம் பிசி என்றால் இன்னொரு பக்கம் ஃபேஷன் டிசைனிங் மூலம் சம்பாதித்து வருகிறார்.
இந்நிலையில் இவர்,தன்னுடைய குடும்பத்துடன் வெளிநாட்டில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் மாடர்ன் உடையில் சும்மா கலக்கிறீங்களே என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!