தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் தான் பாக்கியராஜ். இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின. அதிலும் இவர் இயக்கத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியாகிய முந்தானை முடிச்சு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இப்படத்தில் இவருடன் சேர்ந்து ஊர்வசி, தவக்களை,தீபா, கே.கே.செளந்தர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும் இப்படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் நடிகை பூர்ணிமாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் இருக்கின்றனர்.
இதில் இவருடைய மகளான சரண்யா கடந்த 2006-ம் ஆண்டு மலையாள நடிகர் ப்ருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த பாரிஜாதம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் வரவேற்பைப் பெற்றாலும் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.
இதனால் சினிமாவை விட்டு விலகி அமெரிக்கா சென்று இருந்தார். அப்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரைக் காதலித்து வந்தார். அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் பல முறை விபரீத முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளன சரண்யா திருமணம் செய்யாமலே இருந்து வந்தார்.
தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதன் காரணமாக காமெடி மற்றும் அரசியல் பின்னணி கொண்ட படத்தில் நடித்து வருகிறார். பதினான்கு வருடம் கழித்து மீண்டும் திரைத்துறையில் களமிறங்க உள்ளாராம் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- இயக்குநர் நெல்சனின் மகனை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!
- எப்போது திருமணம்..? நடிகை அபர்ணாவின் தீயாய் பரவும் பதில்..!
- நயனின் ஹனிமூனின் புகைப்படத்தை யார் முதலில் லைக் போட்டது தெரியுமா..? அட இவரா..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!