விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.
கோதை சரஸ்வதி மற்றும் வசுவைக் கண்டதும் அர்ஜுன் ஓடிப் போய் வரவேற்கின்றார். அப்போது கோதை நீ கூப்பிட்டதால் வரல, இன்டைக்கு ராகினியோட வாழ்க்கைல முக்கியமான நாள் அதான் வந்திருக்கிறோம் என்று சொல்ல, தமிழ் யாருக்காகவும் வந்தால் என்னை அத்தை உள்ளே வாங்க எனக் கூட்டிட்டு போகின்றார்.
தொடர்ந்து கோதையைக் கண்டதும் ராகினி சந்தோஷப்படுகின்றார். இது ஒரு புறம் இருக்க வசு, வரச் சொன்னதால் போலீஸ் உள்ளே வருகின்றனர். போலீஸைப் பார்த்த அர்ஜுன் பயப்பிடுகின்றார். அப்போது வசு அர்ஜுன் ஏதாவது தில்லாலங்கடி வேலை பண்ணிடக் கூடாது என்பதற்காகத் தான் போலீஸை வரவைச்சேன் என்கின்றார்.
மேலும் அங்கு நடேசன் தமிழ் கார்த்திக் எல்லோரும் வருகின்றனர். அப்போது நடேசன் கோதையிடம் நான் அவ்வளவு சொல்லியம் என் பேச்சை மீறி வந்திருக்கிற தானே அந்த அர்ஜுன் உன்னை இங்க வரவைச்சு அவமானப்படுத்த தான் பிளான் பண்ணி வரவைச்சிருக்கிறான் என்று சொல்லி திட்ட தமிழும் சரஸ்வதியைத் திட்டுகின்றார்.
அப்போது கோதை என் பொண்ணோட நிகழ்வு நான் ஆசீர்வாதம் வழங்கக்கூடாதா என ஆசீர்வதிக்க போக அர்ஜுனின் அம்மா,சரஸ்வதி மட்டும் ஆசீர்வாதம் பண்ண கூடாது என்று சொல்ல கோதையும் ராகினியும் சரஸ்வதியும் ஆசீர்வாதம் பண்ணட்டும் என்று சொல்ல அர்ஜுனின் அம்மா மறுத்து விடுகின்றார்.
அந்த நேரம் சரஸ்வதி மயங்கி விழ அங்கு நின்ற வயோதிப் பெண் ஒருவர், சரஸ்வதியின் கையைப் பிடித்து பார்த்து சரஸ்வதி கர்ப்பமாக இருக்கின்றார் என்று சொல்கின்றனர்.இதைக் கேட்டு எல்லோரும் சந்தோஷப்பட சரஸ்வதியும் வசுவுக்கு ஆசிர்வாதம் வழங்குகின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.
Listen News!