• Sep 20 2024

விபத்தில் சிக்கி ஹாஸ்பிட்டலில் இருக்கும் சரஸ்வதி- அர்ஜுனை இழுத்துப் போட்டு அடிக்கும் தமிழ்- சந்தேகத்தில் ராகினி- Thamizhum Saraswathiyum Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

எல்லோரும் புது வீட்டுக்கு போவதற்காக ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். எல்லோரும் கிளம்ப தமிழும் சரஸ்வதியை பைக்கிள் ஏற்றிக் கொண்டு கிளம்புகின்றார். அப்போது அர்ஜுன் ஆட்களை வைத்து தமிழின் பைக்கிள் மோத விடுகின்றனர். அந்த வகையில் தமிழின் பைக்குடன் பைக் மோதியதில் சரஸ்வதி கீழே விழுந்து விடுகின்றார்.


இதனால் பதறிப்போன தமிழும் நமச்சியும் சரஸ்வதியை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போகின்றனர்.சரஸ்வதியை ஹாஸ்பிட்டலில் சேர்த்ததும் நமச்சி இந்த ஆக்ஸ்சிடென்ட் தானாக நடந்திருக்காது. அது அந்த அர்ஜுன் பிளானாகத் தான் இருக்கனும் என்கின்றார். இதனால் தமிழும் அர்ஜுன் வீட்டுக்குச் சென்று அர்ஜுனை இழுத்துப் போட்டு அடிக்கின்றார்.

அப்போது ராகினி வந்து தடுக்க, அர்ஜுன் சரஸ்வதியை ஆக்சிடென்ட் பண்ணிய விஷயத்தைச் சொல்ல, ராகினி நம்பாமல் தமிழைத் திட்ட தமிழ் நீ தான் அவனை கண்ணமூடிட்டு நம்பிட்டு இருக்கிற சரஸ்வதிக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா நான் உன்னை சும்மாவே விடமாட்டேன் கொன்று போட்டிட்டு போய்ட்டே இருப்பேன் என்று மிரட்டிட்டு போகின்றார்.


அப்போது ராகினியை உள்ளே கூட்டிட்டு போன அர்ஜுன் தனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை என்று பேசுகின்றார்.அப்போது ராகினி அண்ணன் வண்டி என்று தானே சொல்லிச்சு பைக் என்று சொல்லலையே உங்களுக்கு எப்படி பைக் என்று தெரியும் என்று கேட்கின்றார். அப்போது அர்ஜுனின் மாமா வெளில பேசிட்டு இருந்தாங்க பைக் தான் ஆக்சிடெண்ட் பண்ணிச்சு என்று, அதை வைச்சு தான் சொன்னேன் என்று சொல்லி சமாளிக்க ராகினியும் சமாதானம் ஆகின்றார்.

தொடர்ந்து அர்ஜுனைக் கூட்டிட்டு போய் அவரது அம்மாவும் அக்காவும் ஏன்டா இப்படிப் பண்ணின ஒரு கருவைக் கலைக்கிறது எல்லாம் மோசமான செயல் இது தான் பண்ண போற என்று தெரிஞ்சிருந்தால் அப்பவே பண்ண வேண்டாம் என்று சொல்லியிருப்போம் என்கின்றார். பின்னர் சரஸ்வதிக்கு எதுவும் ஆகிடக் கூடாது என்று கடவுளிடம் வேண்டுகின்றனர்.


மறுபுறம் சரஸ்வதிக்கு ஆக்ஸ்சிடென்ட் ஆகி விட்டது என்பதை அறிந்த கோதை பதறிப்போய் துடிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement