• Sep 20 2024

அர்ஜுன் செய்த தில்லாலங்கடி வேலையை நிரூபிக்க புது வழியைக் கண்டுபிடித்த சரஸ்வதி- ராகினியை கண்டபாட்டுக்கு திட்டிய வசு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

சரஸ்வதி ராகினியை கோயில் கண்டு நலம் விவாரித்தபோது ராகினி திட்டிய விஷயத்தை வந்து சரஸ்வதி தமிழிடமும் நமச்சியிடமும் சொல்ல பதிலுக்கு தமிழும் திட்டுகின்றார். உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை நீ எதுக்கு அவகிட்ட போய் பேசனும் என்னோட வேலை எதுவோ அதை மட்டும் பார்க்க வேண்டியது தானே அவங்களுக்கு எதுக்கு நம்மளை நிரூபிக்கனும் என்று சரஸ்வதியைத் திட்டி விட்டுச் செல்கின்றார்.


பின்னர் வீட்டில் வசு ராகினியை அழைத்து திட்டுகின்றார். அடுத்த முறை ஹாஸ்பிட்டலுக்கு போகும் போது மூளைஇருக்கா என்று செக் பண்ணிப்பாரு என்று எல்லாம் திட்ட கோதையும் நடேசனும் வந்து என்ன ஆச்சு என்று கேட்க வசு ராகினி சரஸ்வதியை கோயில் வைத்து உங்களுக்கு குழந்தை பிறக்காது என்று அப்பிடிப் பிறந்தாலும் கொலை காரக் குழந்தை என்று தான் சொல்லுவாங்க என்று சொல்லி இருக்கிறா என்று சொல்கின்றார்.

இதைக் கேட்ட நடேசன் உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு இப்பிடியா பேசுவ விசத்தை கக்கிட்டு வந்திருக்கிறியே என்று சொல்ல கோதை இவளுக்கு தான் அவங்க கிட்ட பேச விருப்பம் இல்லையே, அவங்க எதுக்கு இவங்க கிட்ட பேசனும் ஒதுங்கி போக வேண்டியது தானே, என்று ராகினிக்கு ஆதரவாகப் பேச எல்லோரும் அங்கிருந்து கிளம்புகின்றனர். இதனால் நடேசன் அதிர்ச்சியடைகின்றார்.

பின்னர் கோதை ரூமுக்கு வந்ததும் ஏன்மா இப்படிப் பேசினாய் என்று கேட்ட போது ராகினி மாசமாக இருக்கிறா இந்த டைம்ல எதுக்கு கோபமாகப் பேசுவான் என்று வந்து விட்டேன் சீக்கிரம் மாப்பிள்ளை பற்றிய உண்மையை கண்டு பிடிக்கனும் என்று சொல்கின்றார். மறுபுறம் அர்ஜுன் தன்னுடைய நண்பரிடம் பேசிட்டு இருக்கிறார். இதனை பக்கத்து சீட்டிலிருந்து நமச்சி கேட்கின்றார்.

அதில் அவருடைய நண்பர் எங்க அம்மாவுக்கு ஆபரேஷனுக்கு இரண்டு லட்சம் வேணும் என்று சொல்ல,அர்ஜுன் தர முடியாது என்று சொல்ல அவர் என்னால தான் நீ ராகினியை திருமணம் செய்த பழசெல்லாம் மறந்திட்டியா என்று கேட்கின்றார். இவ்வாறு இருவரும் பேசிட்டு இருக்கும் போது அர்ஜுன் பணம் தரமுடியாது செய்யிறதை செய் என்று சொல்லி விட்டுச் செல்கின்றார்.


இதனை மறைந்து நின்று கேட்ட நமச்சி சரஸ்வதியிடம் வந்து சொல்கின்றார். அப்போது சரஸ்வதி உமாபதி சேர் கிட்ட விஷயத்தை சொல்லி பணத்தை வாங்கி அவன் கிட்ட கொடுத்து எல்லா உண்மையையும் கேட்டா அவன் அர்ஜுன் பற்றி எல்லார் கிட்டையும் வந்து சொல்லுவான் தானே என்று சொல்ல இருவரும் கிளம்புகின்றனர்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement