• Sep 20 2024

சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது... மண்ணோடு மண்ணாகிய மாபெரும் நடிகர்... கண்ணீரோடு வழியனுப்பிய ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 200இற்கும் அதிகமான படங்களில் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.


இந்நிலையில் சென்னையில் நடிகர் சரத்பாபு உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சரத்குமார், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகைகள் சுஹாசினி, ராதிகா சரத்குமார் என ஏராளமான பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 


இதையடுத்து பிற்பகல் 1 மணியளவில் சென்னையில் தி-நகரில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட நடிகர் சரத்பாபுவின் உடல் ஏற்கெனவே கூறியபடி 2 மணியளவில் இறுதிச்சடங்குகள் முடிக்கப்பட்டு கிண்டியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தற்போது தமிழ் சினிமாவே தலையில் வைத்துக் கொண்டாடிய மாபெரும் நடிகர் மண்ணோடு மண்ணாகியுள்ளமை ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது.

Advertisement

Advertisement