• Sep 21 2024

ஆரம்பமானது சரத்பாபுவின் இறுதி ஊர்வலம்... திரண்டு வந்து அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்குமார் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்துள்ளமை திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சினிமாவைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர் வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகி ஹைதராபாத்தில் வசித்து வந்த நிலையில், திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென ஹைதராபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று 1.30மணி அளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதனையடுத்து தற்போது இவரின் உடல் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்தவகையில் அவரின் உடல் இன்று காலை சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு 9 மணிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை திரை பிரபலங்கள், ரசிகர்கள் இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் எனக் கூறப்பட்டது. 


இந்நிலையில் தற்போது இவரின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகி இருக்கின்றது. சரத்பாபுவின் உடல் கிண்டி தொழிற்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்பட இருக்கின்றது.  ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் இறுதிக் கிரியையில் கலந்து கொண்டுள்ளனர். 

Advertisement

Advertisement