• Sep 20 2024

ரம்மி விளம்பரத்தில் நடித்து விட்டு அதன் தடைக்கு சரத்குமார் கூறிய பதில்...என்னையா நடக்குது..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில்  வில்லனாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் சரத்குமார், அதன் பின்னர்  90களில் டாப் நடிகராக வலம் வந்தார். இப்போது  முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

9அத்தோடு அதிலும் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் என்ற கேரக்டரில் கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல பெற வாய்ப்பு பெற்றதைத் தொடர்ந்து, தற்போது பொன்னியின் செல்வன் 2 இந்த மாதம் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படு ஜோராக நடந்து கொண்டிருக்கின்றது.


இவ்வாறுஇருக்கையில்  இவர் சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்திருந்தார்.இதனால் பல சர்ச்சைகள் சரத்குமார் மீது எழுந்தது. இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடையப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய சரத்குமார். ' ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உடனடியாக அமலுக்கு வந்திருப்பதை நான் வரவேற்கிறேன் ' என கூறியுள்ளார்.


ஆன்லைன் ரம்மி விளம்பரத்திலும் நடித்துவிட்டு, தற்போது ஆன்லைன் ரம்மி தடையை வரவேற்கிறேன் என சரத்குமார் கூறியுள்ளதை நெட்டிசன்கள் சில கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement