லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். இந்தப் படம் கண்டிப்பாக ஹிட் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது.
லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார்.அதனை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் பூஜை விரைவில் போடப்பட்டு லியோ ரிலீஸுக்கு பிறகு ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. மேலும் இதுகுறித்த அப்டேட்டுகளும் லியோ ரிலீஸுக்கு பிறகே வரும் என வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் விஜய்யும், வெங்கட் பிரபுவும் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். அங்கு 3டியில் விஜய்யின் முழு உடலும் ஸ்கேன் செய்யப்படும் புகைப்படம் வெளியானது. எனவே இது சைன்ஸ் பிக்ஷன் கதையாக இருக்குமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர். ஸ்கேனை முடித்துவிட்டு தி ஈக்வலைஸர் 3 படத்தை விஜய் பார்க்கும் புகைப்படத்தையும் வெங்கட் பிரபு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்தப் படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார் என்றும்; அதில் ஒன்று வயதான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் வயதான விஜய்க்கு ஜோதிகா ஜோடியாக மறுக்கவே சினேகாவிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன .அப்படி நடித்தால் சினேகா நடிக்கும்பட்சத்தில் 20 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. இவர்கள் இரண்டு பேரும் கடைசியாக 2003ஆம் ஆண்டு வெளியான வசீகரா படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் வசீகரா படத்தில் நடிக்க வேண்டும் என விஜய்யை சசிகலா மிரட்டியதாக அந்தணன் கூறியிருக்கிறார்.
அவர் அளித்த ஒரு பேட்டியில் பேசுகையில், ''போயஸ் கார்டனில் இருந்து விஜய்யிடம் கால்ஷீட் கேட்டார்கள். அதற்கு விஜய் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் சசிகலா கேட்கிறார். அதனால் நீங்கள் உடனே கால்ஷீட் கொடுக்கத்தான் வேண்டும் என மிரட்டித்தான் வசீகராவில் விஜய்யை நடிக்க வைத்தார்கள் என்று அந்தப் படம் வெளியானபோது பல செய்திகள் உலாவின" என தெரிவித்தார்.
Listen News!