நடிகர் சத்யராஜ் அவர்கள் வசந்த் ரவியுடன் இணைந்து தற்போது நடித்து வரும் திரைப்படம் 'வெப்பன்'. இந்த படத்தில் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆக்ஷன் மற்றும் திரில்லர் ஜர்னரில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை 'வெள்ளை ராஜா, சவாரி' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் குகன் செம்மியப்பன் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆனது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இப்படத்தினுடைய படப்பிடிப்பின் போது விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கின்றது.
அந்தவகையில் இந்த படத்தின் படப்பிடிப்பானது கும்மிடிபூண்டி அருகே உள்ள ஏ ஆர் ஆர் ஃபிலிம் சிட்டியில் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுமார் 40 அடி உயரத்தில் மீன் விளக்குகளை பொருத்தும் பணியில் லைட் மேன்கள் பலர் ஈடுபட்டிருந்தனர். இதில் பணியாற்றிய குமார் என்கிற லைட் மேன் கால் தவறி கீழே விழுந்து, திடீரென உயிரிழந்தார்.
இந்த சம்பவமானது தற்போது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் படப்பிடிப்பு தளங்களில் உரிய முதலுதவி சிகிச்சையுடன், படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தாலும் எதிர்பாராத விதமாக அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதும்,சில உயிரிழப்புகள் ஏற்படுவதும் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இவரின் இறப்பிற்கு பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!