• Sep 20 2024

மீண்டும் எடுக்கப்படும் பொன்னியின் செல்வன் படத்தின் காட்சிகள் -நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இத்திரைப்படம் பிரமாண்ட செலவில் எடுக்கப்பட்டதோடு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியுள்ளது என்பதும் முக்கியமாகும்.

பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வனின் PS-1 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இப்படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் பரவி வருகின்றது.

அதன்படி இப்படத்தின் ஒரு சில காட்சிகளில் இயக்குநர் மணிரத்னத்திற்கு திருப்தி இல்லாததால், மீண்டும் அந்த காட்சியை எடுத்து வருகிறார் என சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது இது தவறான செய்தி என்பது தெரியவந்துள்ளது, படம் உருவாகியுள்ளதில் இயக்குநர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தயாரிப்பாளர்களின் திட்டத்தின் படி போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணி நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

https://www.youtube.com/embed/IpBdOP32lrk

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement