• Sep 20 2024

கார்த்தி நடிப்பில் வெளியாகிய விருமன் திரைப்படத்தின் திரைவிமர்சனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் விருமன். இப்படத்தை இயக்குநர் முத்தையா இயக்கியிருந்ததோடு இப்படத்தில் கதாநாயகியாக ஷங்கரின் மகள் அதிதி நடித்திருக்கின்றார்.பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படத்தின் கதைக்களம் என்னவென்று பார்ப்போம்.

{விருமன்} கார்த்தியின் கண்முன் அவரது தாய் {முத்துலட்சுமி} சரண்யா தீயில் எரிந்து மரணமடைகிறார். தனது தாயின் மரணத்திற்கு காரணம் தனது தந்தை பிரகாஷ் ராஜ் என்பதினால், சிறு வயதிலேயே தந்தையின் மேல் கோபம் கொண்டு கொலை செய்ய முயற்சி செய்கிறார் விருமன்.

ஆனால், மருமகனின் வாழ்க்கை வீணாகி விடுமோ என்று எண்ணி கார்த்தியை அவருடைய தந்தையிடம் இருந்து தனியாக அழைத்து செல்கிறார் தாய் மாமன் ராஜ்கிரண். பல வருடங்கள் கழித்து மீண்டும் தனது தந்தையை சந்திக்கும் கார்த்தி அதே கோபத்துடன் இருக்கிறார்.இது ஒரு புறம் இருக்க, தனது மூன்று பிள்ளைகளின் வாழ்க்கைக்கு எதுவும் செய்யாமல், தன்னை நம்பி மட்டுமே அவர்கள் பிழைக்க வேண்டும் என்று எண்ணும் பிரகாஷ் ராஜிடம் இருந்து தனது அண்ணன்கள் மூன்று போரையும் மீட்க போராடுகிறார் கார்த்தி. இந்த போராட்டத்தில் கார்த்தி என்னென்ன இன்னல்களை சந்தித்தார். தந்தையின் மேல் கார்த்திக்கு இருந்த கோபம் தணிந்ததா? என்பதே படத்தின் மீதி கதை..

படம் பற்றிய அலசல்

வழக்கம் போல தனது நக்கல் கலந்த நடிப்பினாலும் ஆக்ஷன், செண்டிமெண்ட், காதல், எதார்த்தம் என தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து முடித்துள்ளார் கார்த்தி.அதே போல அறிமுக படமாக இருந்தாலும் தனது நடனத்தினாலும் நடிப்பினாலும் அசத்தி இருக்கிறார் அதிதி.

இவர்களைப் போல பிரகாஷ் ராஜ் மற்றும் ராஜ் கிரண் ஆகியோரும் நடிப்பில் மிரட்டி எடுத்துள்ளனர்.இவர்களைப் போல சரண்யா பொன்வண்ணன், வடிவுகரசியின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சூரியின் நகைச்சுவை ஓரளவு ஒர்கவுட் ஆகியுள்ளது.

ஆர்.கே. சுரேஷ் சண்டைக்காக மட்டுமே படத்தில் வருகிறார். மற்றபடி மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், சிங்கம்புலி, மைனா நந்தினி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக செய்தியுள்ளனர். நடிகர்கள் சிறப்பாக நடித்திருந்தாலும் இயக்கம், திரைக்கதை இரண்டிலும் சொதப்பல் ஏற்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றது. காலம் கடந்து போன கதைக்களத்தில் படம் அமைந்துள்ளதால் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement