இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் மறைந்த கணவருக்காக நடிகை மேக்னா ராஜ் செய்த செயல் தீயாய் பரவி வருகின்றது.
பிரபல கன்னட நடிகை மேக்னா ராஜ். கன்னட சினிமா நட்சத்திரங்களாக சுந்தர் பிரமிளா தம்பதியின் மகளான இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா, மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார்.
சிரஞ்சீவி சர்ஜா இறக்கும் போது கர்ப்பிணியாக இருந்த மேக்னா ராஜ்க்கு அடுத்த சில மாதங்களில் ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு ராயன் என பெயர் வைத்துள்ளார் மேக்னா. இந்நிலையில் மேக்னா ராஜ்க்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் தீயாய் பரவி வந்தது.
இதையடுத்து தன்னுடைய கவனமெல்லாம் தனது மகனின் எதிர்காலத்தை பற்றிதான் உள்ளது என விளக்கம் கொடுத்திருந்தார் மேக்னா ராஜ். இந்நிலையில் நடிகை மேக்னா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை ஷேர் செய்து வாயடைக்க வைத்துள்ளார்.
அதாவது மறைந்த தனது கணவர், சிரு மற்றும் தனது மகன் ராயன் ஆகியோரின் பெயரை கையில் பச்சைக் குத்தியுள்ளார் மேக்னா ராஜ்.மேலும் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள மேக்னா ராஜ், எனக்கு எப்போதும் இவர்கள்தான் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
Listen News!